கடன் மறுசீரமைப்பு செயன்முறை: உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ள இலங்கை மற்றும் பிரான்ஸ்
இலங்கை மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயன்முறையுடன் தொடர்புடைய கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
கொழும்பில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடன் இருப்பு மீள் அட்டவணை
இந்த இருதரப்பு உடன்படிக்கையின் மூலம், 2042 வரை 390 மில்லியன் யூரோ கடன் இருப்பு மீள் அட்டவணைப்படுத்தப்படுகிறது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கே.எம்.மஹிந்த சிறுவர்தன மற்றும் பிரான்ஸ் சார்பில் பலதரப்பு விவகாரங்கள், வர்த்தகம், அபிவிருத்தி கொள்கை திணைக்களத்தின் உதவிச் செயலாளரும் திறைசேரி பணிப்பாளர் நாயகமுமான விலியம் ரூஸ் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.
நிதியமைச்சு கூறும் விடயம்
இலங்கை மற்றும் பிரான்ஸிற்கு இடையிலான வலுவான மற்றும் நீண்ட கால இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்த இந்த கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கை உதவும் என்று இலங்கையின் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசியினர் உயிர் போகும் தருணத்திலும் நேர்மை தவறமாட்டார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam

திருமணமாகி ஒரே வாரத்தில் காதலனுடன் ஓட்டம் பிடித்த மணமகள்: தப்பித்தேன் என்கிறார் மணமகன் News Lankasri

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம் News Lankasri
