விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிள்ளையான் பிழைத்தார் : இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்
பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது இராணுவப் புலனாய்வுப் பிரிவில் உள்ள குழுதான் என இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான மொனரவில தெரிவித்தார்.
சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
பிள்ளையானை அழகுப்படுத்திய திரிபோலி குழு
அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “இராணுவப் புலனாய்வு பிரிவில் ஒரு சிறிய தனிக்குழுவொன்று உள்ளது. அந்தக் குழுதான் 'திரிபோலி' என்ற கொலைக் கும்பல்.
2009ஆம் ஆண்டுக்குப் பின்னரே அது உருவாக்கப்பட்டது. அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அந்தக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவே பிள்ளையானுக்கு வெள்ளை ஆடை அணிவித்து அழகுபடுத்தியது” என்றார்.
'நீங்கள் புலனாய்வு அதிகாரி என்பதை எப்படி நம்புவது?' என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவரது சேவையைப் பாராட்டி வழங்கப்பட்ட சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்களை அவர் அந்தச் சிங்கள ஊடகத்துக்குக் காண்பித்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

கார் பிரச்சனையில் தப்பித்த முத்து-மீனாவிற்கு வந்த அடுத்த அதிர்ச்சி.. என்ன செய்வார்கள், சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
