நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளது: ஜனக ரத்நாயக்க
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை இந்த அறிவித்துள்ளது.
இதற்கமைய, நாளை மாலையளவில் 260 மெகா வோட் மின்சாரம் தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்று (23) ஆரம்பமாகவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ள காலப்பகுதியில் இரவு நேர மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்துவதில்லை என தீர்மானித்தல் உட்பட குறைந்தபட்ச மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"முன்னதாக சில அரசியல் அதிகாரிகள் மின்வெட்டு காலம் ஒரு நாளைக்கு 15 மணிநேரம் வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறுவதை நாங்கள் பார்த்தோம், பின்னர் வேறு சில அரசியல் பிரமுகர்கள் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து கருத்து தெரிவித்ததைப் பார்க்கிறோம். இந்த இரண்டு கூற்றுகளும் முற்றிலும் ஆதாரமற்றவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

"PUCSL என்பது, இந்த ஆண்டு இறுதி வரை, குறைந்தபட்ச குறுக்கீடுகளுடன் மின் உற்பத்தியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த போட்டித் திட்டத்தை அரசாங்கத்திற்கு வழங்கும் அதிகாரம் ஆகும்.
குறுக்கீடு இல்லாதது மற்றும் மின்வெட்டு நேரத்தை நீட்டிப்பது போன்ற பிற கோரிக்கைகள் அனைத்தும் எங்களிடம் கலந்தாலோசிக்காமல் அல்லது முறையான தொழில்நுட்ப பகுப்பாய்வு செய்யாமல் செய்யப்படுகின்றன, ”என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கு எமக்கு மாதாந்தம் 75 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான எரிபொருள் தேவைப்படுவதாகவும், அதனை அரசாங்கத்தினால் வழங்க முடிந்தால் தடையற்ற மின்சாரத்தை வழங்க முடியும் எனவும் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri