வட்டி வருமானத்தின் பெறுமதி! மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு
பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே மக்கள் வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கின்றார்கள்.
ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாம்.
எனினும், இலங்கையில் வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர். எனினும் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
