வட்டி வருமானத்தின் பெறுமதி! மத்திய வங்கி ஆளுநரின் முக்கிய அறிவிப்பு
பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வட்டி வீதங்கள் குறையும் போது, வைப்புக்களுக்கான வட்டி வருமானம் குறைவடையும். ஆனால் இலங்கையிலேயே மக்கள் வட்டிப் பணத்தில் வாழ்க்கையை நடத்த முயற்சி செய்கின்றார்கள்.
ஏனைய நாடுகளில் வட்டி வீதங்கள் மிகவும் குறைவாகும். எனவே அங்கு பணத்தை வைப்புச் செய்து அதில் கிடைக்கும் வட்டி வருமானத்தில் வாழ்வது கடினமாகும். அதனைவிட அந்தப் பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து உழைக்கலாம்.
எனினும், இலங்கையில் வட்டி வீதங்கள் அதிகம் என்பதால் வைப்புக்களை வைத்து வரும் வட்டியில் வாழ முயற்சிக்கின்றனர். எனினும் பணவீக்கம் அதிகரித்தால் வட்டி வருமானத்தின் பெறுமதி குறைந்து விடும் என குறிப்பிட்டுள்ளார்.





Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
