எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய உலகப் பொருளாதார மன்றத்தின் தலைமைச் செயல் அதிகாரி பதவி விலகல்
உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) தலைமைச் செயல் அதிகாரியான ஜெர்மி ஜுர்கன்ஸ் (Jeremy Jurgens), பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்கு இருந்த தொடர்புகள் குறித்த கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து தனது பதவியை பதவி விலகல் செய்துள்ளார்.
எப்ஸ்டீனுக்கும் ஜுர்கன்ஸுக்கும் இடையே இருந்த நிதித் தொடர்புகள் மற்றும் சந்திப்புகள் குறித்து அண்மைக்காலமாகப் புலனாய்வுச் செய்திகள் வெளியாகி வந்தன.
இந்த விவகாரம் உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிறுவனத்தின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கடும் அதிருப்தி
சுமார் இரண்டு தசாப்தங்களாக உலகப்பொருளாதார மன்றத்தில் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்த ஜுர்கன்ஸ், கடந்த 2021ஆம் ஆண்டு முதல் அதன் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்து வந்தார்.

எப்ஸ்டீனுடனான இவரது தொடர்பு குறித்த கூடுதல் தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, மன்றத்தின் பங்காளிகள் மற்றும் சர்வதேசத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இது குறித்து உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜுர்கன்ஸின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாகவும், புதிய தலைமைச் செயல் அதிகாரியைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
எப்ஸ்டீன் விவகாரத்தில் ஏற்கனவே பல முக்கியப் பிரமுகர்கள் சிக்கியுள்ள நிலையில், தற்போது உலகப் பொருளாதார மன்றத்தின் உயர் அதிகாரியும் பதவி விலகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri