இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம்

Ministry of Education Sajith Premadasa G.C.E. (O/L) Examination Grade 05 Scholarship examination Education
By Benat Dec 06, 2023 03:21 AM GMT
Report

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும். மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்களை மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட விலைமதிப்பிட முடியாத மாணிக்கக் கல்

ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை 

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். 50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது.

இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் | Sri Lanka Education System

நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, சுருங்கிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால், சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

அதற்காக நாட்டில் இருக்கும் 10,126 பாடசாலைகளிலும் ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று தற்போது பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரை கற்பிக்கப்படும் தொழிநுட்ப கல்வியை 1ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம வரைக்கும் விருத்தி செய்ய வேண்டும்.

அத்துடன் தொழிநுட்ப கல்வியை தாய் மொழியில் அல்லாமல் ஆங்கில மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதன் மூலமே அதன் உண்மையான கல்வியை பெற்றுக்கொள்ள முடியும்.

அதேநேரம் நாட்டில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மாட் வசதி உள்ள பாடசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மாட் கல்வி மூலமே ஸ்மாட் நாட்டை ஏற்படுத்த முடியும்.

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த மாணவியின் இறுதிச் சடங்கு (Photos)

யாழில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த மாணவியின் இறுதிச் சடங்கு (Photos)

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் கல்வியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும், தற்போது, அதன் தரம் குறைந்துள்ளது. உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த வேண்டும்.

நாட்டில் 70 வீதமானவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கும் உயர்கல்விக்கான உரிமை வழங்கப்பட வேண்டும். தனியார் பல்கலைக்கழகங்களை எதிர்க்கும் பெரும்பான்மையானவர்களின் பிள்ளைகள் தனியார் பல்கலைக்கழகங்களிலும் நிறுவனங்களிலும் கல்வி கற்கிறார்கள்.

மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது

தனது சொந்த பிள்ளைகளுக்கு வழங்கும் அதே விருப்பத்தை நாட்டின் ஏனைய பிள்ளைகளுக்கு அந்த முறைமை பொருத்தமற்றது என்று வீதிக்கிறங்குகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கையின் ஊடாக நாட்டின் இலவச கல்வியை பலப்படுத்தி, முற்போக்கான மற்றும் நவீனமயமாக்கல் செயற்பாடுகளை முன்னெடுத்து, கல்வி வாய்ப்புகளையும் கல்விசார் தெரிவுகளையும் வழங்குவதற்கு செயற்படுவோம்.

இலங்கை கல்வி முறையில் மாற்றம் : புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் | Sri Lanka Education System

அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும். மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்கள் மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது.

அதேபோன்று பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுவதற்கு நாங்கள் ஆதரவு. ஆனால் மாணவர்கள் அதிகரிக்கப்படுவதுபோல் மனித வள மற்றும் பெளதிக வளங்கள் அந்த பல்கலைக்கழகங்களுக்கு வழங்க வேண்டும்.இன்று அது முறையாக இடம்பெறாததால் பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழங்களின் தரம் குறைந்துள்ளது.

உலக பல்கலைக்கழகங்கள் 500இல் இந்த பல்கலைக்கழகங்கள் இருந்து வந்தன. ஆனால் தற்போது அது இல்லை. பல்கலைக்கழகங்களில் இருந்த பேராசிரியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர். சிலர் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக பல்கலைக்கழங்களில் கற்பிப்பதற்கு போதுமான பேராசிரியர்கள் இல்லை.பேராசிரியர்களின் இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண அவர்களின் வரி அதிகரிப்பை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் மொத்த தேசிய உட்பத்தியில் கல்விக்கு 4,5 வீதம் ஆவது ஒதுக்க வேண்டும். அதன் மூலமே நாட்டில் கல்வித்துறையை முன்னேற்ற முடியும் என குறிப்பிட்டார். 

பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்ட பௌத்த பிக்கு

பிள்ளையானுடன் இரகசிய சந்திப்பை மேற்கொண்ட பௌத்த பிக்கு

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

டுபாயிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தடவியல் கணக்காய்வை மேற்கொள்ள சஜித் வலியுறுத்தல்

இலங்கை கிரிக்கெட் தொடர்பில் தடவியல் கணக்காய்வை மேற்கொள்ள சஜித் வலியுறுத்தல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, காங்கேசன்துறை, கோண்டாவில்

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US