நாட்டின் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பில் அலி சப்ரி வெளியிட்டுள்ள தகவல்!
இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான விடயங்களில் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
23 உறுப்பினர்களைக் கொண்ட இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் (ஐ.ஓ.ஆர்.ஏ) அமைச்சர்கள் குழுவின் 22வது கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பொருளாதாரம் மற்றும் வர்த்தகம்
இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை பரஸ்பர முன்னேற்றம் மற்றும் சமுத்திர எல்லையிலுள்ள நாடுகளுடன் தீவிர ஈடுபாடு குறித்த முக்கியத்துவத்தையும் அவர் இதன்போது கோடிட்டு சுட்டிக்காட்டினார்.
இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் அர்ப்பணிப்பு என்பது, தமது நாட்டு வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.
கூட்டத்தில் முறையே 23 உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் மூத்த
அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.