கையடக்க தொலைபேசிக்காக தற்கொலை செய்த பாடசாலை மாணவன்
மாத்தறையில் பாடசாலை மாணவன் ஒருவர் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ரொட்டும்ப, பல்லேகந்த பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார்.
கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள பெற்றமையினால் இவ்வாறு குறித்த மாணவன் தற்கொலை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியந்துள்ளது.
மாணவன் கல்வி நடவடிக்கைக்காக வழங்கப்பட்ட கையடக்க தொலைபேசியை தவறாக பயன்படுத்தியமையினால் பெற்றோர் அதனை மீளப் பெற்றுள்ளனர். எனினும் தன்னிடம் இருந்து கையடக்க தொலைபேசியை பெற்றோர் மீள எடுத்துக் கொண்டமையினால் மனவிரக்தியில் மாணவன் தற்கொலை செய்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 9 நிமிடங்கள் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்கும் ஈரான்? பதற்றத்தில் மத்திய கிழக்கு நாடுகள் News Lankasri
