இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் தடை! பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு
2026 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயா்படுத்துதல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் இன்று (05) நள்ளிரவு 12 மணி முதல் தடைசெய்யப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து பயிற்சி வகுப்புகள், பாட விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் பயிலரங்குகள் இன்று (05) நள்ளிரவுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சை முடியும் வரை இந்தத் தடை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்டுள்ள விடயங்கள்
இந்த காலகட்டத்தில், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கேள்விகளை கொண்ட வினாத்தாள்களை அச்சிடுவது, விநியோகிப்பது அல்லது விளம்பரப்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

பதாகைகள், துண்டுப்பிரசுரங்கள், அத்துடன் மின்னணு மற்றும் அச்சு ஊடகங்கள் மூலம் விளம்பரங்களை செய்வது அல்லது அத்தகைய பொருட்களை வைத்திருப்பதும் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் ஆகஸ்ட் 09 அன்று நடைபெற உள்ளது.
இதற்கிடையில், மோசமான வானிலை நிலவுவதை கருத்தில் கொண்டு, 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் இன்று நடைபெறவுள்ளது.