மங்கள ஒரு சிறந்த தேசபக்தர்! - சமந்தா பவர் புகழாரம்
சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனமான USAID இன் நிர்வாகி சமந்தா பவர், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவை ஒரு சிறந்த தேசபக்தர் மற்றும் அரசியல்வாதி என்று வர்ணித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் அமெரிக்க தூதுவரான சமத்தா பவர், மங்கள சமரவீரவின் மறைவால் தான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானதாக கூறியுள்ளார்.
மங்கள சமரவீர, நீதிக்காகவும் நல்லிணக்கத்திற்காகவும் போராடினார்.
வெளியுறவு அமைச்சராக இருந்தபோது, காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை உருவாக்கவும், போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உயிர் பிழைத்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கவும் அவர் முயற்சிகளை மேற்கொண்டார் என்றும் சமந்தா பவர் குறிப்பிட்டுள்ளார்.
I am devastated by the passing of Mangala Samaraweera, former Sri Lankan Foreign Minister, a great patriot and statesman, advocate for democracy and human rights, and a treasured friend. My sincere condolences to his family and the people of #SriLanka. 1/4 pic.twitter.com/OkgxMfutUn
— Samantha Power (@PowerUSAID) August 24, 2021

ஈழத்தமிழரும் தமிழக இனச் சகோதரத்துவ அரசியலும் 58 நிமிடங்கள் முன்

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
