ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல் (Photos)
யாழ். வட்டுக்கோட்டை தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளரும், மனித உரிமைகள் மற்றும் சமூக செயற்பட்டளாருமான முருகவேல் சதாசிவத்தின் நல்லூரிலுள்ள அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தாக்குதல் சம்பவம்
இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வியாழக்கிழமை (15.09.2022) அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் அலுவலக யன்னல்கள் சேதமடைந்துள்ளன.
முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.