பொருளாதாரப் போரை வெல்லக்கூடியவரே மொட்டுவின் வேட்பாளர்: சாகர காரியவசம்
இலங்கையின் இறுதி போரை மகிந்த முடிவுக்குக் கொண்டு வந்தது போல், பொருளாதாரப் போரை வெற்றிகொள்ளக்கூடிய ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன(Sri lanka podujana peramuna) கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
அவர் மேலும் கூறியதாவது,
"ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி இதுவரை எந்தவொரு தேர்தலிலும் தோற்றது கிடையாது.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கக் கட்சி சார்பில் சில வேட்பாளர்கள் தயார் நிலையிலேயே உள்ளனர்.
உரிய நேரம் வரும்போது வெற்றி வேட்பாளரைக் களமிறக்கி ஜனாதிபதித் தேர்தலிலும் வெற்றி நடைபோடுவோம்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கருத்துக் கூறுவதில் இருந்து விலகி இருக்குமாறு கட்சி தீர்மானித்துள்ளது.
எனவே, தற்போதைய சூழ்நிலையில் வேட்பாளர் பெயரை, கட்சி முடிவை மீறி அறிவிக்க முடியாது. மகிந்த ராஜபக்ச பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தியவர்.
அப்போது தம்மிக்க பெரேரா(Dhammika Perera), மகிந்த ராஜபக்சவின்(Mahinda rajapaksa) செயலாளராகவும், முதலீட்டுச் சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
நாட்டை மீட்கக்கூடிய தலைவராகவே மகிந்த ராஜபக்சவை அன்று மக்கள் தெரிவு செய்தனர். அவர் மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதுடன் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
அதேபோல் பொருளாதாரப் போரை வெற்றி கொண்டு, நாட்டை மீட்கக்கூடிய வேட்பாளர் ஒருவரை நாம் நிறுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam
