ஆளும் தரப்பு எம்.பி விரைவில் கைது..! வெளியான பரபரப்பு தகவல்
புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு ஹலவத்த உயர் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜெகத் சமந்தவின் வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டிலேயே நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு நேற்றையதினம்(24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நாடாளுமன்ற அமர்வு
இந்நிலையில், நேற்றையதினம் நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்றதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என அஜித் கிஹான் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்காலத்தில் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசாங்கத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் நோக்கில் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri