தமிழர் தாயகத்தை சூறையாடும் பிக்குகளும் தொல்லியல் திணைக்களமும்...
ஶ்ரீலங்காவின் சிங்கள பௌத்த பேரினவாத நிகழ்ச்சி நிரல் தமிழர் தாயகப்பகுதியில் நிகழ்த்தும் அட்டூழியங்கள் தொடர்பில் அக்கறையீனமாக இருக்கும் அரசு அதன் இயந்திரங்களை ஒரு ஆக்கிரமிப்பு வடிவங்களாக வடக்கிலும் இரண்டு பிக்குகளின் தலைமையில் செயற்படுத்த அனுமதித்திருக்கிறது.
அம்பாறையின் பாணந்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தின் தையிட்டி வரை நடந்தேறும் அத்தனை நிலப்பறிப்புகளுக்கும் தொல்லியல் என்ற கவசத்தை பயன்படுத்தி ஆசையை துறந்த புத்தனுக்கு ஆஸ்தி தேடி குவித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழர்கள் ஒரு ஆபத்தின் விழிம்பில் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் நடந்தேறும் அவலங்களை முழுமையான தரவுகளுடன் பேசுகிறது.
இன்றைய அதிர்வு நிகழ்ச்சியின் நேற்றைய நாளில் திருகோணமலையில் இருவேறு பகுதிகளில் இரண்டுவகையில் மிகப்பெரும் தமிழர் விரோத நிகழ்வுகளை நிகழ்த்தி எக்காளமிட்டுக்கொண்டிருக்கும் இவர்களின் கடந்த காலத்தையும் ஆழமாக விவரிக்கிறது இந்த காணொளி...
Peddi Box Office: உலகளவில் பெத்தி திரைப்படம் 9 நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam