யாழில் அர்ச்சுனா எம்பியை மிக இழிவான வார்த்தைகளால் அவமதித்த தவிசாளர்கள்
கடந்த 17ஆம் திகதி யாழ். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் 'வெளியே போடா நாயே' என அரசியல் கட்சிகளின் பிரதேச சபை தவிசாளர் தன்னை கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது அர்ச்சுனா எம்பி, " யாழ். ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன் மற்றும் சக உதவித் தவிசாளர்கள் அச்சபையின் நாகரீகம் தெரியாமல் என்னை இழிவான சொற்களால் வெளியே போடா நாயே என்ற விதத்தில் பொருட்பட விழித்தனர்.
இது, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட வேண்டிய கௌரவம் மற்றும் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட வேண்டிய கௌரவம் இரண்டையும் கேள்விக்குரியதாக்கி இருக்கின்றது” என தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 4 மணி நேரம் முன்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam
தந்தையை இழந்தேன், மனைவியை இழந்தேன்! ஈரானின் புதிய உச்சத் தலைவரின் உணர்ச்சிமிக்க முதல் உரை News Lankasri