நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
தற்போது பல்வேறு வகையான காய்ச்சல் பரவி வருகின்றமையால் உரிய வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் பிரஷீலா சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தலை வலி, கை மற்றும் கால் வலி, காய்ச்சல் என்பன ஏற்பட்டால் உடனே உரிய வைத்தியரை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
சுகாதார தரப்பின் தகவல்
நாடளாவிய ரீதியில் சிறுவர்களிடையே டெங்கு, சிக்கன்குன்யா மற்றும் இன்புளுவன்சா ஆகிய நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது.
இதனால் உரியச் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 23,300 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
சிக்குன்குன்யா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுடன், சுமார் 16 வருடங்களுக்குப் பின்னர் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவானோர் பதிவாகும் மாவட்டங்கள்
சிக்குன்குன்யா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் அதிகளவானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கர்ப்பிணி தாயொருவருக்கு சிக்குன்குன்யா வைரஸ் தொற்று ஏற்படுமிடத்து அது அவரது குழந்தைக்கும் தொற்றக்கூடிய அபாயம் உள்ளதாகச் சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 2 நாட்கள் முன்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

Mahanadhi: பசுபதியின் முகத்திரையை கிழிக்க போராடிய வெண்ணிலாவுக்கு ஏற்பட்ட பரிதாபம்.. இனி நடக்கப்போவது என்ன? Manithan
