பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சிக்கிய நபர் - வெளியான பகீர் தகவல்
பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, நேற்று பிற்பகல் பாணந்துறை-ஹொரேத்துடுவ பாலத்திற்கு அருகில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் ஒருவரை சோதனை செய்தபோது, அவரது சட்டைப் பையில் பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, அதற்கான 3 தோட்டாக்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
பேனா துப்பாக்கி
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த துப்பாக்கி, வேலை செய்யும் நிலையில் உள்ளதெனவும், கொலைக்கு மிகவும் இலகுவாக பயன்படுத்த முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுமார் நான்கரை அங்குல நீளம் கொண்ட இந்த துப்பாக்கி, ஒரு நபரைக் கொல்ல எந்த நேரத்திலும் எடுத்துச் செல்லக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பிரிவு
சந்தேக நபர் இந்த துப்பாக்கியை ஏன் வைத்திருந்தார் என்பது குறித்து களுத்துறை குற்றப்பிரிவு மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

சந்தேக நபர் மொரட்டுவ - மோல்பே பகுதியை சேர்ந்த 43 வயதுடையவராகும். அவர் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri