மன்னிப்பு கோரிய தயாசிறி ஜயசேகர
எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, மன்னிப்பை கோரியுள்ளார்.
வடமத்திய மாகாண சபைக்குச் சொந்தமான BMW கார் 5 மில்லியன் ரூபாகளுக்கும் குறைவாக விற்கப்பட்டதாக முன்னர் கூறியமை தொடர்பிலேயே, அவர் மன்னிப்பை கோரியுள்ளார்.
செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட தவறான செய்திகளால் தான் தவறாக வழிநடத்தப்பட்டதாகவும், ஒரு பொறுப்பான அரசியல்வாதியாக, பதிவைத் திருத்துவதற்கு தான் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜெயசேகர கூறியுள்ளார்.
வெளிப்படைத்தன்மை
எனவே, ஊடகங்கள் துல்லியமான தகவல்களுடன் அதைப் புதுப்பிக்குமாறும், அவர் கேட்டுள்ளார்.

BMW கார் 21.8 மில்லியன் ரூபாகளுக்கு விற்கப்பட்டதாக, வட மத்திய மாகாண உறுதிப்படுத்திய நிலையிலேயே, அவரின் மன்னிப்பு கோரலும் வந்துள்ளது.
ஒட்டுமொத்த வாகன ஏல செயல்முறையில் 124 மில்லியன் ரூபாய்கள் ஈட்டியதாகவும், அது வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்பட்டதாகவும் மாகாண சபை கூறியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri