அரிசி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்
அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளை மற்றும் சிகப்பு அரிசி
இதன்படி உள்நாட்டு வெள்ளை மற்றும் சிகப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராமின் அதிபட்ச மொத்த விற்பனை விலை 215 ரூபா எனவும் சில்லறை விலை 220 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 225 ரூபா எனவும் சில்லறை விலை 230 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் மொத்த விற்பனை விலை 255 ரூபா எனவும் சில்லறை விலை 260 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் தொடர்பிலும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அரிசி இறக்குமதி
இதன்படி, இறக்குமதி செய்யப்படும் பச்சை அரிசி ஒரு கிலோகிராமின் அதிகபட்ச சில்லறை விலை 210 ரூபா எனவும் இறக்குமதி செய்யப்படும் நாடு அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச விலை 220 ரூபா எனவும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இறக்குமதி செய்யப்படும் சம்பா அரிசி ஒரு கிலோ கிராமின் அதிகபட்ச சில்லறை விலை 230 ரூபா எனவும் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam