மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை: பொதுமக்களின் கருத்துக் கோரலுக்கு தீர்மானம்
அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் வரை, தற்போதைய மின்சாரக் கட்டணத்தை பேணுவதற்கு இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் பொதுமக்களின் கருத்தைப் பெறுவதற்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் கே.பி.எல். சந்திரலால், இதனை தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் இன்னும் இரண்டு வாரங்களில் பொது கருத்தாடல்கள் ஆரம்பிக்கும் என்றும், மின்சார சபையின் முன்மொழிவு குறித்து ஆணைக்குழு விசேட ஆய்வு ஒன்றை மேற்கொள்ளும் என்றும் சந்திரலால் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் கருத்து
மேலும், ஆய்வை முடித்து, பொதுமக்களின் கருத்துகளை அறிந்துக்கொண்டதன் பின்னர், மின்சார கட்டணம் குறித்து முடிவு செய்யப்படும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இலங்கை மின்சாரசபை, தனது பரிந்துரையை, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு 2024 டிசம்பர் 6 ஆம் திகதியன்று சமர்ப்பித்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
சுந்தரவள்ளிக்கு தெரியவந்த ரஞ்சித் பற்றிய உண்மை... மூன்று முடிச்சு பரபரப்பான சீரியல் புரொமோ Cineulagam
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri