ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி கைது!
இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டியவில்(Embilipitiya) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போது ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் ஏ.கே 47 ரக துப்பாக்கி, மேலும் பல துப்பாக்கிகள் மற்றும் கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சுற்றிவளைப்பானது நேற்று(05.11.2024) இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கொத்தலாவல சந்திக்கு அருகில் விசேட அதிரடிப்படையினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணை
மேலும் அவர்களிடம் இருந்து 7.62 மில்லிமீட்டர் ரவைகள் 25, 9 மில்லிமீட்டர் ரவைகள் 7 ஏ.கே.47 ரக துப்பாக்கி, இரண்டு வாள்கள் மற்றும் கத்தி ஆகியவை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதுடைய குறித்த சந்தேகநபர், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 'போடி லஸ்ஸி' என்ற பாதாள உலக நபரின் நெருங்கிய சகா என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 23 மணி நேரம் முன்
48 மணி நேரத்தில் நரக மழை பொழியும் - ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ஈரானின் அபாயகரமான எதிரிகளின் பகுதியில் அற்புதமான மீட்பு நடவடிக்கை: மார்தட்டிக்கொண்ட ட்ரம்ப் News Lankasri