ஜனாதிபதி வேட்பாளர்களிடம் கடற்றொழில் சமூகம் விடுத்துள்ள கோரிக்கை
நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலிலே மூன்று பிரதான வேட்பாளர்கள் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலே வட கிழக்கு கடற்றொழிலாளர்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினையை அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிக்கொண்டுவர வேண்டும் என அகில இலங்கை கடற்றொழிலாளர் தொழிற் சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை பரிசீலித்து வட கிழக்கு இணைந்த கடற்றொழில் சமூகம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும்.
அவ்வாறு வெளிக்கொண்டு வரப்படும் செய்தியை இட்டு வட கிழக்கிலுள்ள கடற்றொழிலாளர்களும் ஏனைய மக்களும் ஒற்றுமையாக இணைந்து யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை கடற்றொழில் சமூகம் எடுக்க தீர்மானித்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள விடயங்களை தொகுத்து வருகின்றது கீழ்வரும் காணொளி..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 11 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

பணத்தை விட உறவுகளின் மகிழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
