கிளிநொச்சியில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது
கிளிநொச்சி (Kilinochchi) பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனகபுரம் மற்றும் விவேகானந்தா நகர் பகுதிகளில் ஒரு கிலோ 760 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய இன்று (12.05.2024) இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
இதன்போது, பொலிஸ் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனைக்கு உட்படுத்த முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிளையும் ஒரு கிலோ 500 கிராம் கஞ்சாவையும் விட்டு ஒருவர் தப்பி சென்றுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி பொலிஸ் மது ஒழிப்பு பிரிவுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்து வீதியல் சென்று கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களை சோதனைக்கு உட்படுத்திய போது அவர்களிடமிருந்து 260 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸ் விசேட அதிரடி படையினர் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன் இரண்டு சந்தேகங்களுடன் மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை நாளை (13) நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
