நாட்டுக்கு பாரிய அழிவை ஏற்படுத்தும் காரணி - பிரதம நீதியரசர் எச்சரிக்கை
இயற்கை பேரழிவுகளினால் மட்டுமன்றி, பலவீனமான நீதித்துறை கட்டமைப்பின் காரணமாகவும் ஒரு நாடு மிகக் குறுகிய காலத்திற்குள் அழிந்துபோகக்கூடும் என்று பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தெரிவித்துள்ளார்.
அத்தகையதொரு நிலைமை ஏற்பட்டால், எந்தவொரு சர்வதேச உதவியினாலோ அல்லது சர்வதேச ஆதரவினாலோ நாட்டை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதிமன்ற கட்டமைப்பு சட்டம்
இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தில் புதிய நீதவான்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றக் கட்டமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களுக்கு அமைய சட்டத்தரணிகள் தொழில் குறித்தும் கருத்து வெளியிட்ட பிரதம நீதியரசர், சட்டத்தரணிகளும் ஒழுக்கநெறியான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடத்தையைப் பேண வேண்டும் எனத் தெரிவித்தார்.
நல்ல நன்மதிப்பு, தகுதி மற்றும் அறிவைக் கொண்ட நல்ல மனிதர்களை மட்டுமே சட்டத்தரணிகளாக இணைத்துக்கொள்ள முடியும் எனவும் சட்டத்தரணிகளாகப் பதிவு செய்த பின்னரும் பொறுப்பு முடிந்துவிடுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேண வேண்டும். இல்லையெனில், பிரச்சினைகள் ஏற்படலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் இறையாண்மை
மக்களின் இறையாண்மை குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்ற அதிகாரம், நீதித்துறை அதிகாரம் மற்றும் வாக்குரிமை ஆகிய நான்கு முக்கிய கூறுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் மூன்றாவது அதிகாரமான நீதித்துறை அதிகாரம், மக்களிடமிருந்து மரபுரிமையாகப் பெற்ற அதிகாரமாகும் எனவும், நீதிபதிகள் அதனை மக்களின் நலனுக்காகவே செயல்படுத்துகிறார்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகளுக்கு மக்களே அதிகாரத்தை வழங்குகின்றார்கள் எனவும் அதனை நினைவில் கொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை என்பது நீதிபதிகளின் தனிப்பட்ட நலன்களுக்காக அல்லாமல், மக்களின் நலனுக்காகவும் அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்காகவும் பேணப்பட வேண்டும் எனவும் பிரதம நீதியரசர் வலியுறுத்தியுள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri