ரவி செனவிரத்ன மீதான வழக்கு தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பம்
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன முன்னைய அரசாங்கத்தில் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட வழக்கு தொடர்பில் மீள் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 28ம் திகதி ரவி செனவிரத்ன பயணித்த வாகனம், வௌ்ளவத்தைப் பிரதேசத்தில் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் வண்டி மற்றும் இன்னொரு வாகனம் மீது மோதி சேதம் ஏற்படுத்தி இருந்தது
அநுரகுமார அரசாங்கம்
அந்தச் சந்தர்ப்பத்தில் ரவி செனவிரத்ன குடிபோதையில் இருந்தமை விசாரணைகளில் தெரிய வந்தது.
அதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டார்.
பிணையில் வெளிந்த உடன் தேசிய மக்கள் சக்தியில் இணைந்து செயற்பட்ட அவருக்கு அநுரகுமார அரசாங்கத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர்
இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில் பொலிஸ் பிணையில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரான ரவி செனவிரத்னவை விடுதலை செய்திருக்க முடியும்.
எனினும், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் மற்றும் அன்றைய பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் அழுத்தம் காரணமாகவே ரவி செனவிரத்ன நீதிமன்றத்தில் நிறுத்தபபட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் பணிப்பின்பேரில் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினர் மீள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri
