பாரிய மனித கடத்தல் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அவசர எச்சரிக்கை
மால்டாவில் வேலை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, வெளிநாட்டில் நடத்தும் பெரிய அளவிலான மனித கடத்தல் நடவடிக்கை குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
“துபாய் சுத்தா” என்ற நபர் தனது தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில் காணொளிகளை வெளியிட்டு இந்த மோசடியை மேற்கொண்டு வந்துள்ளார்.
மோசடியில் சிக்கிய நபர்களிடமிருந்து முறைப்பாடுகள்
மேலும் அவருக்கு பணத்தைக் கொடுத்து இந்த மோசடியில் சிக்கிய நபர்களிடமிருந்து தற்போது பணியகத்திற்கு முறைப்பாடுகள் கிடைப்பெற்று வருகின்றன.

அதற்கமைய, அவருக்கு எதிராக தற்போது பணியகத்தினால் அவசியமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன், மேலும் இந்த மோசடியில் சிக்கியவர்கள் இருப்பின் கூடிய விரைவில் பணியகத்திடம் முறைப்பாடு செய்யுமாறு பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கின்றது.
1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தின்படி, இலங்கைக்கு வெளியே வேலைவாய்ப்புகளுக்காக ஆட்களைச் சேர்த்தல், பிரசாரம் செய்தல், பணம் சேகரித்தல், தகவல்களைச் சேகரித்தல், கடவுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளல் ஆகியவற்றுக்கு அனுமதிப்பத்திரம் பெறப்பட வேண்டும் என்பதுடன், அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் பணியகம் குறிப்பிடுகின்றது.
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள்
வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தமது தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகள் அல்லது புதிய சமூக ஊடகப் பக்கங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்யும் போக்கொன்று தற்போது உருவாகியுள்ளதாகவும் பணியகம் அவதானித்துள்ளது.

எனவே, வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக, பணியகத்தின் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களிடம் தவிர வேறு இடைத்தரகர்களிடம் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதைத் தவிர்க்குமாறு பணியகம் வேலை தேடுபோவரிடம் மேலும் கோரிக்கை விடுக்கின்றது.
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri