இலங்கையில் இலட்சக்கணக்கான வாகனங்கள் QR குறியீடு பெறுவதில் சிக்கல்! எழுந்துள்ள பதிய பிரச்சினை
நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 84 இலட்சம் வாகனங்களில், 57 இலட்சம் மட்டுமே இயங்கி வருகின்றன.
ஆனால் 2022-ல் கியூஆர் (QR) திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக 65 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் (DMT) தெரிவித்துள்ளது.
அதன்படி, கியூஆர் திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக, ஐந்து முதல் பத்து இலட்சம் வரையிலான வாகனங்கள் தவறான தரவுகளின் அடிப்படையில் கியூஆர் ஒதுக்கீட்டைப் பெற்று வருகின்றதாக சந்தேகம் எழுந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்கள மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
QR குறியீட்டில் சிக்கல்கள்! கொழும்பு உட்பட பல பகுதிகளில் நீண்ட வரிசைகள் - இன்று வெளியாகவுள்ள அறிவிப்பு
எரிபொருள் பெறுவதற்காக கியூஆர் குறியீடு
அதன்படி, பயன்பாட்டில் இல்லாத சுமார் எட்டு இலட்சம் வாகனங்கள் எரிபொருள் பெறுவதற்காக கியூஆர் குறியீட்டைத் தவறாக பெற்று வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது, நாட்டில் மின்சார மோட்டார் சைக்கிள்கள் உட்பட சுமார் ஒரு இலட்சம் வாகனங்கள் அமைப்பில் இணைந்துள்ளன.
2022-ஆம் ஆண்டு அறிக்கைகளின்படி, கியூஆர் திட்டத்தின் கீழ் எரிபொருள் பெறுவதற்காக 65 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டன, ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
அரசாங்கத்தின் திட்டம்
ஆகஸ்ட் 2022-ல் எரிபொருள் ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்ட 24 மணி நேரத்திற்குள், பத்து இலட்சம் வாகன உரிமையாளர்கள் பதிவு செய்திருந்தனர்.
க்யூஆர் (QR) முறை ஆகஸ்ட் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை 13 மாதங்களுக்குச் செயல்படுத்தப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் இராணுவச் சூழல் காரணமாக, கடந்த திங்கட்கிழமை (16ஆம் திகதி) காலை 6 மணி முதல் க்யூஆர் முறை தொடங்கப்பட்டது.
அதன்படி, 2022-ல் பெறப்பட்ட க்யூஆர் அனுமதி மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன், தினசரி எரிபொருள் நுகர்வை கட்டுப்படுத்தி, எரிபொருள் இருப்பை பாதுகாப்பதே அரசாங்கத்தின் திட்டமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You may like this..
வீட்டிற்கு வந்த மனைவியை பார்த்து பாண்டியன் சொன்ன வார்த்தை, ஷாக்கான கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan