உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான செயல்முறைகள் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே உறுதிப்படுத்தியுள்ளார்.
சாதாரண தர வினாத்தாள் மதிப்பீட்டுப்பணிகள்
இதேவேளை, க.பொ.த சாதாரண தர வினாத்தாள் தொடர்பான மதிப்பீட்டுப் பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் மாதத்தின் பிற்பகுதியில் சாதாரண தரப் பரீட்சைக்கான செயல்முறைப் பரீட்சைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செயல்முறைத் தேர்வுகள் முடிந்தவுடன் சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகளையும் விரைவில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri