முல்லைத்தீவில் பாரிய போராட்டம்: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவிப்பு
எதிர்வரும் 08 ஆம் திகதி முல்லைத்தீவு பாரிய போராட்டம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி ம.ஈஸ்வரி தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இன்று (06.03.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாரிய போராட்டம்
எதிர்வரும் 8 ஆம் திகதி சர்வதேச மகளீர்தினம் மற்றும் 55 ஆவது ஜக்கியநாடுகள் சபைக்கூட்டத்தொடர் நடைபெற்றவுள்ளது.
இந்த நிலையில் பெண்கள் ஆகிய நாங்கள் எங்கள் உறவுகளை தேடிவருவதுடன் அடிமைத்தனமாகவே இலங்கையில் வாழ்ந்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 08 ஆம் திகதி பாரிய போராட்டம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி தாமதமாகி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
மேலும் கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு தொடர்பில் அதற்கான நிதி உதவியினை அரசாங்கம் செய்யவேண்டும் என்பதுடன் அந்த மனித எச்சங்கள் யார் என்பதை கண்டுபிடித்து அதற்கான தீர்வு தரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
