தமிழ் ஊடகர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்துப் போராட்டம்
தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது இன்று(22) நாடாளுமன்றச் சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
இந்தப் போராட்டத்தை ஊடக ஊழியர் தொழிற்சங்கச் சம்மேளனம் மற்றும் இளம் ஊடகவியலாளர் சங்கம் என்பன ஒன்றிணைந்து முன்னெடுத்தன.
போராட்டம்
முல்லைத்தீவைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான க.குமணனைப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் கடந்த 17ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து சுமார் 7 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இதனைக் கண்டித்தும், தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசின் அடக்குமுறையைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
இந்தப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

புடினை சந்திப்பதற்கு முன் பாதுகாப்பு உத்தரவாதத்தை கேட்கும் ஜெலென்ஸ்கி! இடம் இதுவாக இருக்கலாம் News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
