சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வு
உலக சந்தையில் இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வகையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் (19.1.2024) 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மசகு எண்ணெய்யின் விலை
அத்துடன் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (19.1.2024) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.6 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. மேலும் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.10 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
பாகிஸ்தானுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக ஒட்டுமொத்த ஆசியப் பிராந்தியமும் பாதிக்கப்படலாம் என சர்வதேச ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் இலங்கையின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என அவர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
