வளைகுடா நாடுகள் உட்பட அண்டை நாடுகளுக்கு ஈரானின் அவசர அறிவிப்பு
வளைகுடா நாடுகள் உட்பட அண்டை நாடுகள் அனைத்தும் தங்கள் பிராந்தியத்திலிருந்து, அமெரிக்க இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராகச்சி அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், அமெரிக்காவின் பாதுகாப்பு வலயம் என்பது ஓட்டைகள் நிறைந்தது.
பாதுகாப்பு பிரச்சினை
அமெரிக்கா தருவதாகக் கூறும் பாதுகாப்பு குடை என்பது ஓட்டைகள் நிறைந்தது என்பது நிரூபணமாகியுள்ளது. அது பாதுகாப்பைத் தருவதற்குப் பதிலாகப் பிரச்சினைகளையே ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக மாற்ற உதவுமாறு சீனா உள்ளிட்ட பிற நாடுகளிடம் அமெரிக்கா தற்போது கெஞ்சிக் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று முதல் QR அடிப்படையில் எரிபொருள் விநியோகம்! வாகனங்களுக்கான எரிபொருள் அளவு குறித்து வெளியான தகவல்