ஈரான் - இஸ்ரேல் மோதல் தீவிரம் : தீர்ந்துவரும் ஏவுகணைகள் - அமெரிக்காவிடம் அவசர உதவி கோரிய இஸ்ரேல்
ஈரானுடனான மோதல் தொடர்வதால், பாலிஸ்டிக் ஏவுகணை இடைமறிப்பான்கள் மிகக் குறைவாக இருப்பதாக இஸ்ரேல் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள் காட்டி செமாஃபோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அதன் ஆதரவு ஆயுதக் குழுக்களுடன் தொடர்ந்து நடைபெற்று வரும் போரினால், இந்த தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பு
இஸ்ரேலின் நீண்ட தூர பாதுகாப்பு அமைப்பு ஈரானின் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரான் தனது ஏவுகணைகளில் கொத்து வெடிமருந்துகளைச் சேர்ப்பதாகவும், இது இருப்பு குறைவை அதிகரிக்கக்கூடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இஸ்ரேலிய அதிகாரிகள் இது குறித்து அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
துபாயில் ICU-வில் தாய்: இந்தியா வர ரூ 50 லட்சம் கேட்கும் ஏர் ஆம்புலன்ஸ்: தவிக்கும் தமிழர் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam