ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் ரீதியாக ஆராய்ந்து செயற்பட வேண்டும் : பேராசிரியர் ரகுராம் தெரிவிப்பு

Jaffna University of Jaffna Sri Lanka Presidential Election 2024
By Erimalai Apr 29, 2024 08:35 AM GMT
Report

ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவதா? அல்லது பகிஷ்கரிப்பு செய்வதா? என்று அரசியல் ரீதியாக ஆராய்ந்து எது மிக சரியானது என முடிவெடுக்க வேண்டும் என யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப் பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் தெரிவித்துள்ளார்.

யாழ் (Jaffna) வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (28.04.2024) இடம் பெற்ற மாமனிதர் தராகியின் 19ஆவது நினைவேந்தலில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது, அவர் மேலும் தெரிவித்ததாவது, 

"பொது வேட்பாளர், பகிஷ்கரிப்பு இரண்டும் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றன. இதில் எது மிக சரியானது என விஞ்ஞான பூர்வமாக அரசியல் பூர்வமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாங்கள் இப்போது இருக்கின்றோம்.

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேயிலை பெருந்தோட்டத்துறை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அரசியல் தொடர்புகள் 

எந்தக் கட்டத்திலும் தென்னிலங்கை அரசியல் சக்திகளை, தென்னிலங்கை அரசியல்வாதிகளை அடுத்து வரக்கூடிய ஆளும் தரப்புக்களை நாங்கள் நம்பவே முடியாது என்பதை அன்றிலிருந்து இன்றுவரை வரலாறு எங்களுக்கு திரும்ப திரும்ப சொல்ல வந்தாலும் கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கு ஓட்டம் ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம் என்று இங்கு இருக்கக்கூடிய தமிழ் ஆங்கில பத்திரிகைகளுக்கு அதிகமாக எங்கெங்கு தளங்கள் கிடைக்கிறதோ அங்கெல்லாம்.எங்களுடைய நியாயத்தை மிக அற்புதமான புலமைத்துவ எழுத்தோடு அவர் சொல்லி வந்தார்.

presidential-elelction-jaffna-professor-raguram-

தமிழ் நெறி ஆசிரியர் கழாமில் அவர் இருந்தபோது வரைந்த கட்டுரைகள், தமிழ் நெறி ஊடாக அவர் சொல்லிய செய்திகள் மிக முக்கியமானவை. நாங்கள் பழைய செய்திகளை எடுத்து பார்க்கும்போது தேவையான உஷாத்துணை தேடும் போதும் எல்லாம் சிவராம் அண்ணனுடைய கட்டுரைகள்.

இன்றைக்கும் எங்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்றன. சர்வதேச அரசியலை மற்றும் உள்ளக அரசியலை அவர் தெளிவாக புரிந்து வைத்திருந்தார். தெற்கு அரசியலையும் அவர் தெளிவாகப் புரிந்திருந்தார். அதற்கு தான் இந்த நினைவு மீட்டலின் ஒரு கடைசி பகுதியாக நான் வரவேண்டும்.

தெற்கு அரசியலில் அவருக்கு ஆரம்பத்தில் ஒரு நாட்டம் இருந்தது. தெற்கு அரசியலில் அவருக்கு இருந்த தொடர்புகள், குறிப்பாக ஆரம்ப காலகட்டத்தில் அவர் சார்ந்த அமைப்பு ஜே.வி.பியுடன் கொண்டிருந்த தொடர்புகள் வழியாக தெற்கிலே எங்களுடைய போராட்டத்தின் நியாயப்பாடுகளை, எங்களுடைய போராட்டத்தின் வலுவை, சொல்நெறியை எடுத்துச் செல்லலாம் என்ற ஒரு மிகப்பெரிய ஆர்வம் அவருக்கு இருந்தது. அதனை அவர் தனது எழுத்துக்களின் மூலம் எழுதி இருந்தார்.

கனடாவில் பிரபல ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்

கனடாவில் பிரபல ஈழத்தமிழ் அரசியல்வாதி மரணம்

தெளிந்த நிலைப்பாடு 

பல சந்திப்புகளிலும் அவர் எடுத்துரைத்திருந்தார். புத்திஜீவிகளுடனான சந்திப்புகள், தெற்கு அரசியல் கட்சிகளுடனான சந்திப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுடனான சந்திப்புகள் என்று பல சந்திப்புக்களையும் அவர் நிகழ்த்தியிருந்தார். அவருக்கு ஏராளமான தென்னிலங்கை நண்பர்கள் இருந்தார்கள்.

presidential-elelction-jaffna-professor-raguram-

பத்திரிகை நண்பர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் கட்சிகள் என பலர் இருந்தார்கள். ஆனால் ஒரு கட்டத்திலே சிவராம் ஒரு மிகத் தெளிவான முடிவுக்கு வந்தார். தென்னிலங்கையர்களை நாம் மாற்ற முடியாது. தென்னிலங்கை அரசியல்வாதிகளை நாம் மாற்ற முடியாது, தென்னிலங்கை அரசியல் சூழலை நாம் மாற்ற முடியாது. என்ற ஒரு தெளிந்த நிலைப்பாட்டில் அவர் வந்தார்.

அது புத்திஜீவிகளாக இருக்கலாம். அரசியல் கட்சிகளாக இருக்கலாம். அல்லது சமூக செயற்பாட்டாளர்களாக இருக்கலாம். அவர்களுக்கு ஏதோ ஒரு வரையறை அவர்களுக்குள் ஆழமாக இறங்கியிருக்கக்கூடிய கருத்தியல் தளத்திற்கு அப்பாலே அவர்கள் எங்களுக்காக சிந்திப்பார்கள்.

அல்லது எங்களுடைய நியாயங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்பது எல்லாம் ஒரு பொய்க்கதை என்பதை அவர் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டியிருந்தார். இன்றைக்கு நாங்கள் அந்த சந்தியில் தான் மீண்டும் வந்து நிற்கின்றோம்.

தமிழ் அரசியல்வாதி ஒருவரின் மோசமான செயல்! பௌத்த தேரரால் அம்பலமான தகவல்

தமிழ் அரசியல்வாதி ஒருவரின் மோசமான செயல்! பௌத்த தேரரால் அம்பலமான தகவல்

தீர்க்கமான முடிவு 

எந்தக் கட்டத்தில் தென்னிலங்கை அரசியல் சக்திகளை, தென்னிலங்கை அரசியல்வாதிகளை அடுத்து வரக்கூடிய ஆளும் தரப்புக்களை நாங்கள் நம்பவே முடியாது என்பதை அன்றிலிருந்து இன்றுவரை வரலாறு எங்களுக்கு திரும்ப திரும்ப சொல்ல வந்தாலும் கூட அதை மறுத்து நாங்கள் குறுக்கு ஓட்டம் ஓடுவதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

presidential-elelction-jaffna-professor-raguram-

உண்மையில் சிவராமினுடைய நினைவு மீட்டலிலே நான் சொல்லக்கூடிய விடயமும் அதுதான். எங்களை விடவும் தென்னிலங்கை மக்களுடன் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் மிக ஆழமான, நெருக்கமான உறவைக் கொண்டு இருந்தவர். சந்திப்புகளை நடாத்தியிருந்தவர்.

அவர் பட்ட அனுபவம் என்பது தென்னிலங்கை அரசியல் சக்திகளை அல்லது தென்னிலங்கை ஆளும் தரப்புக்களையோ அல்லது அடுத்த வரப்போகுன்ற நம்பிக்கை தரக்கூடியதாக நாங்கள் கற்பிதம், கற்பனை செய்கின்ற விடயங்களையோ அவர் நம்ப தயாராகவே இல்லை.

இதுதான் இன்றைக்கு எங்களுக்கு கிடைக்கின்ற செய்தி. தென்னிலங்கை இன்றைய அரசியல் சூழலோடு சிவராமன் அண்ணனை நாங்கள் மீட்டுப் பார்க்கின்றபோது சிவராமன். அண்ணனை ஒரு உஷா துணையாக கொண்டு பார்க்கின்ற போது எங்களுக்கு கிடைக்கின்ற செய்தி நாங்கள் யாரையும் நம்ப முடியாது. எவரையும் நம்ப முடியாது யாருக்காகவும் எங்களுடைய பெருமதியான வாக்குகளை நாங்கள் அழிக்கவும் முடியாது.

ஆகவே, எங்களுக்கு இருக்கக்கூடிய தேரிவுகள் எது என்பதை, எது சரியான தெரிவு என்பதை அது பொதுவேட்பாளர் இருக்கலாம், அல்லது நாங்கள் வாக்களிக்காமலே ஒதுங்கி இருக்கலாம் அல்லது இந்த இரண்டு தெரிவுகளிலே எது சரியானது என்பதை நாங்கள் விஞ்ஞான ரீதியாக அல்லது அறிவியல் பூர்வமாக செய்யவேண்டும்.

நோயாளியை அழைத்து வந்தவர்களை தாக்கிய வைத்தியசாலை ஊழியர்கள்

நோயாளியை அழைத்து வந்தவர்களை தாக்கிய வைத்தியசாலை ஊழியர்கள்

அரசியல் வளர்ச்சி 

உண்மையில் இந்த இரண்டு நிலைப்பாடுகளுமே ஒரு ஒருமித்த புள்ளியில் இருப்பதை தான் நான் உணர்ந்து பார்க்கிறேன். அதாவது தென்னிலங்கை அரசியல் சக்திகளை நாங்கள் நம்பவே முடியாது. இந்த தேர்தல் இருந்து பூரணமாக நிராகரிப்பதாக அல்லது விலகிக் கொள்வதாக இருந்தாலும் சரி. ஒரு வேட்பாளரை நாங்கள் தேடுவதாக இருந்தாலும் சரி, இந்த இரண்டு நிலைப்பாடுகளும் ஏதோ ஒரு வகையில் ஒரு புள்ளியில் தான் சந்திக்கின்றன.

presidential-elelction-jaffna-professor-raguram-

தெற்கு அரசியலை நாங்கள் நம்ப முடியாது. எதிர்காலத்துக்காக நாங்கள் எங்களை பணயம் வைக்க முடியாது என்பதைத்தான் சொல்கின்றன. இந்தக் கட்டத்தில் எது சரி என்பதை நாங்கள் கட்சி அரசியல் சார்ந்து இல்லாமல் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒரு விஞ்ஞான பூர்வமாக அரசியல் அறிவு பூர்வமாக தேர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே இதற்கு மேலாக இந்த இடத்திலே வேறு எதனையும் சொல்ல விரும்பவில்லை. 

நான் ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நிச்சயமாக அது தென்னிலங்கை அரசியல் சக்திகளுக்காக நாங்கள் எப்போதுமே ஆதரவாக இருக்க முடியாது அது ஒரு தவறான வழிகாட்டலாக தான் இருக்கும் என்கின்ற சிவராமனுடைய பட்டறிவை நாங்கள் மீண்டும் இந்த நினைவு குரலிலே எங்கள் மனங்களில் ஏற்றுக்கொண்டு. நாங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக நாங்கள் துரிதமாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம்.

அந்த வகையில் சிவராமன் என்றைக்கும் எங்களுக்கு ஒரு உஷா துணையாக இருப்பார். அவருடைய அரசியல் பாதை எங்களுடைய போராட்ட பாதை. கற்றுத் தந்திருக்க கூடிய பல் பரிமாணம் மிக்க ஒரு ஊடக ஆளுமை. இவற்றுக்கெல்லாம் அவர்தான் ஒரு முழு உதாரணமாக எங்கள் கண் முன் நிற்கின்றார். அவரை வணங்கி வரவேற்கின்றோம்” என கூறியுள்ளார். 

நாட்டில் இறப்பு மற்றும் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டில் இறப்பு மற்றும் பிறப்பு எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, கொழும்பு

15 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இறம்பைக்குளம், Franconville, France

18 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Mitcham, United Kingdom

03 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, வவுனியா, Auckland, New Zealand, சிட்னி, Australia

18 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், London, United Kingdom

08 May, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, London, United Kingdom

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு 13

11 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், Toronto, Canada

14 Apr, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US