பிரித்தானியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி
காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகளில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்கின்றார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17.09.2022) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பிரித்தானியாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகள்
எதிர்வரும் 19ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள இரண்டாம் எலிசபெத் மாகராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.
உலகின் பல நாடுகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.