இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தை தீவிரப்படுத்தியவர் ஜனாதிபதி கோட்டாபய: சபா குகதாஸ்

Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lankan Peoples
By Kanamirtha May 23, 2022 07:47 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தைத் தீவிரப்படுத்தியவர் ஜனாதிபதி கோட்டாபய  என்று வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் மே19 தேசிய வீரர்கள் தின நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய கலந்து கொண்டு ஊடகங்கள் முன் உரையாற்றும் போது அமைதியான தாய் நாட்டில் இனவாதத்திற்கோ வேறு எந்த தீவிரவாதத்திற்கோ இடமில்லை என நாடு ஏதோ மிக அமைதியாக இருப்பது போல உரையாற்றினார்.

நாடு தீவிர இனவாதத்தின் விளைவை தற்போது அறுவடை செய்கிறது என்ற கசப்பான உண்மையைக் கூறத் தவறியுள்ளார். இலங்கை தீவில் 1948 ஆண்டுகளின் பின்னர் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும் அதிகாரத்தைப் பெற இனவாதத்தையே ஆயுதமாகக் கையில் எடுத்தனர்.

இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தை தீவிரப்படுத்தியவர் ஜனாதிபதி கோட்டாபய: சபா குகதாஸ் | President Gotabhaya Intensifies Sri Lankan Rulers

ஆரம்பத்தில் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்க பிரதமராக வருவதற்குக் கையில் எடுத்தது தனிச் சிங்கள சட்டம்! அதேபோல் தற்போது ஜனாதிபதியாக உள்ள கோட்டாபயவும் ஒரே நாடு ஒரே சட்டம்!! என்ற இனவாத கோசத்தை முன்வைத்தார்.

பல்லினங்கள் வாழும் அழகிய இலங்கை தீவில் கடும் போக்குவாத பிரசாரத்தில் பௌத்த சிங்கள நாடு என்ற கோசத்தை முதன்மைப்படுத்தி கடந்தகால அரச தலைவர்களைவிடச் சிங்கள மக்களின் பெரும்பான்மை வாக்கைப் பெற்ற ஒரே தலைவர் கோட்டாபய தான்.

ஆனால் இரண்டு ஆண்டுகளில் அதன் விளைவு மிகவும் கசப்பானதாக மாறியுள்ளது.

இலங்கை ஆட்சியாளர்களில் இனவாதத்தை தீவிரப்படுத்தியவர் ஜனாதிபதி கோட்டாபய: சபா குகதாஸ் | President Gotabhaya Intensifies Sri Lankan Rulers

உலகில் பல்லினங்கள் வாழும் நாடுகளில் ஒற்றையாட்சி அரசியலமைப்பு நீக்கப்பட்டு சகல இனங்களையும் மதிக்கின்ற அதிகாரப் பகிர்வைக் கொண்ட சமஷ்டி அரசியலமைப்புக்களே காணப்படும் போது, விதி விலக்காக இலங்கையில் பிற்போக்குவாத சிந்தனை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பே இனவாதத்திற்குத் தீனி போட்டு வளர்ப்பதாக அமைந்துள்ளது.

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லவும் தனி மனித அதிகார ஆசைகளைக் களையவும் ஒற்றையாட்சி அரசியலமைப்பை மாற்றி சகல இனங்களுக்குமான அதிகாரப் பகிர்வை ஐக்கிய இலங்கைக்குள் வழங்கக் கூடிய அரசியலமைப்பைக் கொண்டு வருவதன் மூலமே இனவாதத்தையும் தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியும். அமைதியான தாய் நாட்டை கட்டியெழுப்ப முடியும்'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US