ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று லொறியுடன் மோதிய விபத்தில், பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் லொறியுடன் மோதியதில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (25) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுராதபுரத்திலிருந்து வவுனியாவில் உள்ள ஒரு கிடங்கிற்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி, பிரதான வீதியிலிருந்து சாலைக்கு அருகில் அமைந்துள்ள கிடங்கிற்கு திரும்பும் போது, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை ..
இந்நிலையில், வவுனியா பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக லொறியின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த பொலிஸ் சார்ஜனின் மனைவி மற்றும் குழந்தை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதவாச்சி, கும்புகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
