வெளிச்சத்திற்கு வந்த 5 கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்..! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..

Batticaloa Pillayan Sivanesathurai Santhirakanthan Crime Law and Order
By Bavan Jun 15, 2026 10:57 AM GMT
Report

மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (15) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் சாலே! பேச்சுத்திறனை இழக்கும் அபாயம்..

உயிருக்கு ஆபத்தான நிலையில் சுரேஷ் சாலே! பேச்சுத்திறனை இழக்கும் அபாயம்..

பிள்ளையான் கைது

இதனையடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.


இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 2006 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து முக்கிய குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றில், கல்லடியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கப்பம் வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை, கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து ரி.எம்.வி.பி உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் அடங்குகின்றன.

NDB நிதி மோசடியின் எதிரொலி: மத்திய வங்கிக்கு ஐஎம்எப் அவசர அறிவுறுத்தல்..

NDB நிதி மோசடியின் எதிரொலி: மத்திய வங்கிக்கு ஐஎம்எப் அவசர அறிவுறுத்தல்..

பலத்த பொலிஸ் பாதுகாப்பு

இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் பிள்ளையானை நீதிமன்றத்துக்கு நேரடியாக அழைத்துவர முடியவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், அவர் காணொளி (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

வெளிச்சத்திற்கு வந்த 5 கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்..! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. | Pillayan Case Court Updates

மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிள்ளையானின் நெருங்கிய உதவியாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனியபாரதி (கே. புஷ்பகுமார்) மீது ஏழு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வெளிச்சத்திற்கு வந்த 5 கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்..! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. | Pillayan Case Court Updates   

சுரேஷ் சலேவின் கணினி கடவுச்சொல்லால் நாட்டிற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தல் - பகிரங்க எச்சரிக்கை

சுரேஷ் சலேவின் கணினி கடவுச்சொல்லால் நாட்டிற்கு ஏற்படவுள்ள அச்சுறுத்தல் - பகிரங்க எச்சரிக்கை


மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US