குளத்தில் குதித்து காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
கிளிநொச்சியில், குளத்தில் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் கல் குளிக்கச் சென்ற இளம் குடும்பஸ்தர் சற்று முன்
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் இன்றைய தினம் அப்பகுதியில் நடைபெற்ற ஆலயத் தீர்த்த திருவிழாவிற்கு சென்றிருந்த நிலையில் குளத்துக்கு குளிக்கச் சென்று நீரில் மூழ்கிய நிலையில் இன்று 29-01-2025) பகல் காணாமல் போயிருந்தார்.
இவரை பிரதேச மக்கள் நீண்ட நேரமாக தேடிய நிலையில் இன்று மாலை குறித்த சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்
தேடும் பணி
பெரியகுளம் கண்டாவளையைச் சேர்ந்த கணேசமூர்த்தி ரமேஷ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
மீட்கப்பட்ட சடலம் பிரேதபரிசோதனைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
