பாதுகாப்பு படைகளின் பிரதம அலுவலர் பதவி இரத்து!
பாதுகாப்பு படைகளின் பிரதம அலுவலர் பதவியை இரத்துச் செய்துள்ளதாக அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, குறித்த பதவியைத் தொடர இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய (29) செய்தியாளர் சந்திப்பொன்றில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இதனை அறிவித்துள்ளார்.
பதவி இரத்து
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு படைகளின் பிரதம அலுவலர் பதவியை இனியும் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை.
அதற்குப் பதிலாக குறித்த பதவியின் செயற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
