பாதுகாப்பு படைகளின் பிரதம அலுவலர் பதவி இரத்து!
பாதுகாப்பு படைகளின் பிரதம அலுவலர் பதவியை இரத்துச் செய்துள்ளதாக அரசாங்கம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
ஜெனரல் சவேந்திர சில்வா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, குறித்த பதவியைத் தொடர இலங்கை அரசாங்கம் விரும்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இன்றைய (29) செய்தியாளர் சந்திப்பொன்றில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா இதனை அறிவித்துள்ளார்.
பதவி இரத்து
அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு படைகளின் பிரதம அலுவலர் பதவியை இனியும் தொடர்ந்து நடைமுறையில் வைத்திருக்க அரசாங்கம் உத்தேசிக்கவில்லை.
அதற்குப் பதிலாக குறித்த பதவியின் செயற்பாடுகளை பாதுகாப்பு அமைச்சின் ஊடாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றும் அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
