கார் மோதியதில் குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழப்பு
கொழும்பு - ஒருகொடவத்தை பகுதியில் கார் ஒன்று குடும்பஸ்தர் ஒருவர் மீது மோதியதில் அந்த நபர்
உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விபத்து நேற்று (12.01.2024) இடம்பெற்றுள்ளதோடு விபத்தில் உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
தெமட்டகொடை பிரதேசத்தில் இருந்து களனிப் பாலத்தை நோக்கிப் பயணித்த கார் அந்த நபர் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
குறித்த விபத்தின் போது, படுகாயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒருகொடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
