கார் மோதியதில் குடும்பஸ்தர் பரிதாபகரமாக உயிரிழப்பு
கொழும்பு - ஒருகொடவத்தை பகுதியில் கார் ஒன்று குடும்பஸ்தர் ஒருவர் மீது மோதியதில் அந்த நபர்
உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விபத்து நேற்று (12.01.2024) இடம்பெற்றுள்ளதோடு விபத்தில் உயிரிழந்தவர் அப்பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
தெமட்டகொடை பிரதேசத்தில் இருந்து களனிப் பாலத்தை நோக்கிப் பயணித்த கார் அந்த நபர் மீது மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணைகள்
குறித்த விபத்தின் போது, படுகாயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஒருகொடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam