நேபாளத்தில் பேருந்து விபத்து: 12 பேர் பலி
மத்திய மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து, விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் பாங்கேயின் நேபால்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பேருந்தானது பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் விழுந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 8 பயணிகளின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
22 பயணிகள் காயம்
மேலும், பேருந்து விபத்தில் 22 பயணிகள் காயமடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேபாளத்தின் லமாஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 18 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri
