இலகு தொடருந்து திட்டத்திற்கான செலவை இலங்கை ஏற்க வேண்டும்: ஜப்பான் பகிரங்கம்
ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து திட்டத்தை நிறுத்தியமைக்காக இலங்கை பணம் செலுத்த வேண்டும் என்று ஜப்பான் வலியுருத்தியுள்ளது.
இலங்கை வந்துள்ள ஜப்பானின் நிதியமைச்சர் சுசுகி ஷுனிச்சி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தூதுக்குழுவிடம், நிறுத்தப்பட்ட திட்டங்களை ஜப்பான் மீண்டும் தொடங்குவதற்கும், திட்டத்தை ரத்து செய்ததற்குமாக இலங்கை பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா,
செலவு குறைந்த தீர்வு
“சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை பாதிக்காது, இலங்கை கடன் மறுசீரமைப்பை விரைவில் முடிக்க வேண்டும்.
இதன் பின்னர் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்காக இரத்து செய்யப்பட்டதற்கான பணத்தை இலங்கை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று ஜப்பான் விரும்புகிறது.” என்றார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 1.5 பில்லியன் டொலர் ஜப்பானிய நிதியுதவியுடன் கூடிய இலகு தொடருந்து திட்டத்தை நிறுத்த உத்தரவிட்டார்.
இது வாகன நெரிசலான தலைநகர் கொழும்பிற்கு செலவு குறைந்த தீர்வு அல்ல என்று கூறியிருந்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
