பண்டாரிக்குளம் பகுதியில் எழுமாறாக பீ.சீ.ஆர் பரிசோதனை
வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியில் சுகாதாரப் பிரிவினரால் எழுமாறாக பீ.சீ.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கோவிட் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரப் பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
அதன் ஒரு கட்டமாக வவுனியா மாவட்டத்தில் 1500 பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை எடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், பண்டாரிக்குளம் பகுதியில்
பயணத்தடைக் காலத்தில் வீதியில் பயணித்தோர் மற்றும் வீடுகளில் இருந்தோர் என 50
பேருக்கு இவ்வாறு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.