கோவிட் அல்லாத காரணத்தினால் இறக்கும் நபர்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உத்தரவு
கோவிட் இல்லாத காரணங்களினால் உயிரிழக்கும் நபர்களின் இறுதிக் கிரியைகளை 24 மணி நேரத்திற்குள் நடத்த அனுமதியை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோவிட் தடுப்பு தொடர்பான விசேட குழு இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கூடிய போது ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
கோவிட் அல்லாத மரணங்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல் மற்றும் இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படுவதில் ஏற்படும் தாமதம் குறித்து பலர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.
இதனடிப்படையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் எதிர்கொள்ளும் பொருளாதாரம் மற்றும் ஏனைய சிரமங்களை கவனத்தில் கொண்டு, கோவிட் அல்லாத காரணத்தினால் இறப்பவர்களின் உடல்கள் சம்பந்தமான இறுதிக் கிரியைகளை 24 மணி நேரத்திற்குள் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.