கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் சிக்கல்.. பொதுமக்களுக்கு வெளியான முக்கிய அறிவுறுத்தல்
கணினி அமைப்பு செயலிழப்பு காரணமாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தகவல்களை அறிய 1962 என்ற தொலைபேசி இலக்கத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்று (13) பொதுமக்கள் யாரும் கடவுச்சீட்டுகளைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டாம் என நேற்று அறிவிக்கப்பட்டது.
கணினி அமைப்பு செயலிழப்பு காரணமாக, பத்தரமுல்ல தலைமை அலுவலகம் அல்லது குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் பிராந்திய அலுவலகங்களுக்கு இன்று யாரும் வருகை தர வேண்டாம் என்று பொது பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
தொடர்பு கொள்ளுங்கள்..
கணினி அமைப்பு செயலிழப்பை மீட்டெடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், எதிர்வரும் 16ஆம் திகதி வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும், மேலும் அன்று விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பின் செயலிழப்பு குறித்து, அதன் ஊடகப் பேச்சாளர் மகேஷ் கருணாதாச கூறுகையில், "தரவு அமைப்பில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பப் பிழை காரணமாக, ஒரு நாள் மற்றும் சாதாரண கடவுச்சீட்டுக்களை வழங்க முடியவில்லை.
அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவும் தேவையான தொழில்நுட்பக் குழுவும் தற்போது இந்த நிலைமையைச் சரிசெய்யப் பணியாற்றி வருகின்றன.
இது சரிசெய்யப்பட்டால், அந்த தருணத்திலிருந்து கடவுச்சீட்டுக்களுக்கான விசாக்களை வழங்கத் தொடங்கலாம்.
ராஜபக்சக்களை பாதுகாக்க பெரும் பாடுபடும் இலங்கை தேரர்கள்: சமாதானத்திற்காக திரளும் வெளிநாட்டு தேரர்கள்!
எப்போது வரலாம்..
அதேநேரம், 1962 என்ற தொலைபேசி இலக்கம் மூலம் சம்பந்தப்பட்ட இணையப் பக்கத்திற்கான தகவல்களைப் பெற முடியும். குறித்த தகவல்கள் இணையதளத்தில் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

தரவு அமைப்பு புதுப்பிக்கப்பட்டவுடன் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வருகை தரலாம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால், 1962 தொலைபேசி இலக்கத்தின் மூலம் விசாரித்து, உங்களுக்கு ஏற்ற நேரத்தில் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்விடயத்தில் சிக்கல் நீங்காதிருந்தால், அடுத்த வாரம் தலைமையகத்தையோ அல்லது கிளை அலுவலகங்களையோ நேரில் அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
தரவு அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு அனைத்து கிளை அலுவலகங்களையும் பாதித்துள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அழகி படத்தில் நடித்த இந்த நடிகரை உங்களுக்கு நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam