இலங்கைக்கு மனைவியுடன் வந்த ஜெர்மனிய பிரஜைக்கு நேர்ந்த கதி
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த ஜெர்மனிய பிரஜை, இன்று கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அளுத்கம, களுவாமோதராவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்த ஜெர்மனியே பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஓய்வுபெற்ற 74 வயதான ஹங்க் பிரெட் ஹைன என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறுகியகால விடுமுறை
உயிரிழந்தவர் தனது மனைவியுடன் குறுகியகால விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடற்கரையில் தங்கியிருந்த வெளிநாட்டினரும் இலங்கையர்களும் ஒன்று சேர்ந்து நீரில் மூழ்கியவரை மீட்டு பேருவளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் அவர் உயிரிழந்துள்ளார். பேருவளை மருத்துவமனையில் பிரேத பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும் வரை சடலத்தை களுத்துறையில் உள்ள நாகோடா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
"காலம் முடிவு செய்துவிட்டது".. முதலமைச்சர் விஜய்யை தொடர்ந்து அரசியலில் களமிறங்குகிறாரா சூர்யா.. Cineulagam
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri