பதவிக்கு ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல : கருணாகரம் காட்டம்
கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு குரங்கு மாதிரி தாவித்திரிபவன் நான் அல்ல என்பதை சாணக்கியன் புரிந்துகொண்டு ஏனையவர்களை தூற்றுவதை நிறுத்தி உங்களை நீங்கள் சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று(13) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யார் யாருக்கு வாக்களித்தார்கள்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் என்னைப்பற்றி உண்மைக்கு பறம்பாக பல அவதூறுகளை வெளிப்படுத்தினார்.
மண்முனை தென் ஏருவில்பற்று பிரதேச சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் தெரிவில் 20 உறுப்பினர் கொண்ட அந்த சபையில் தவிசாளர் தெரிவு ஒரு இக்கட்டான நிலையில் நடைபெற இருந்தது.
அந்த வகையில் எமது கட்சி உறுப்பினர் திறந்த வாக்கெடுப்பை கோரியது. ஆனால் தமிழரசு கட்சி இரகசிய வாக்கெடுப்பை கோரியதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் தமிழரசு கட்சியுடன் இணைந்து இரகசிய வாக்கெடுப்பை கோரியதையடுத்து அங்கு இரகசிய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
எனவே இந்த இரகசிய வாக்கெடுப்பில் யார் யாருக்கு வாக்களித்தார் என யாராலும் ஊகிக்க முடியாது. இருந்தபோதும் எமது கட்சி உறுப்பனர் தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்தார் என்பது எப்படி தெரியும் அதனை சாணக்கியன் எப்படி உறுதிப்படுத்தினார் எப்படி என் மீது குற்றச்சாட்டுக்களை அடுக்கினார்.
தமிழரசு கட்சிக்கு பயந்து
இந்த இரகசிய வாக்கெடுப்பில் ரிஎம்வி கட்சியின் உறுப்பினர் ஒருவரை உள்வாங்கியது போல தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் ஒருவர் ஏன் தமிழரசு கட்சிக்கு வாக்களித்திருக்கு முடியாது.
மாவட்டதில் சகல பிரதேச சபையில் தமிழரசு கட்சிக்கு எதிராக ஜனநாயக கூட்டமைப்பு வாக்களிக்கவில்லை மண்முணை ஆரையம்பதி சபை தவிசாளருக்கு ஆதரவாக எமது கட்சி உறுப்பினர் இருந்தார்.
அவ்வாறே வியாழக்கிழமை காலையில் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் பிரதி தவிசாளர் தெரிவின் போதுகூட எமது கட்சி உறுப்பினர்கள் தமிழரசு கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறசெய்தனர்.
வாழைச்சேனையில் இடம்பெற்ற தவிசாளர் தெரிவில் தமிழரசு கட்சிக்கு எமது உறு;பினர் வாக்களித்தார் ஆனால் சாணக்கியன் தென்எருவில்பற்று பிரதேச சபையில் நடந்த சம்பவத்தின் பின்னர் நாங்கள் பயந்து தமிழரசு கட்சிக்கு வாக்களித்தாக பேசியுள்ளமை விசித்திரமானது.
கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு
இறால் தன்னுடைய தலையில் கழிவை வைத்துகொண்டு நாறுது என கூறுவதைப் போன்று தங்களுக்குள் இருக்கின்ற பிரச்சினைகளுக்கு கட்சியை நீதிமன்றம் கொண்டு சென்று மக்களை புதினம் பார்க்க வைக்கும் நீங்கள் என்னை எனது கட்சியில் இருந்து இடைநிறுத்துவதற்கு சவால் விடுவதற்கு நீங்கள் யார்? என்ன அருகதை இருக்கின்றது.
43 வருடமாக ஒரே கட்சியில் ஒரே கொள்கையுடன் தமிழ் தேசியத்துக்காக ஆயுத போராட்டமாக இருந்தாலும் சரி அகிம்சை போராட்டமாக இருந்தாலும் சரி அரசியல் ரீதியாகவும் ஒரே கட்சியில் நான் பயணத்துக் கொண்டிருக்கின்றேன்.
ஒன்றை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் தேசிம் என்றால் என்ன தமிழ் தேசியம் என்றால் என்ன? போராட்டம் என்றால் என்ன? இந்த போராட்டத்தின் மூலம் ஏற்பட்ட இழப்பு என்ன? தமிழ் மக்களின் தேவை என்ன? என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்
வெறுமனவே கதிரைக்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு ஏனையவர்களை தூற்றுவதை விமர்சிப்பதை விடுத்து உங்கள் கட்சியில் இருந்து கட்சிக்கு எதிராக செயற்படுகின்ற நீங்கள் உட்பட்டவர்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுங்கள்.
ஏனைய கட்சியில் என்ன நடக்கின்றது என்பதை எட்டி பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |