கிரிக்கெட் விளையாட்டுடன் எவரும் சூழ்ச்சியாட இடமளிக்கவே முடியாது: சஜித் திட்டவட்டம்

Sri Lanka Parliament Sajith Premadasa
By Rakesh Nov 07, 2023 01:53 PM GMT
Report

இலங்கையில் 220 இலட்சம் மக்களின் மனதில் குடிகொண்டுள்ள கிரிக்கெட் விளையாட்டுடன் நிறைவேற்று அதிகாரம், சட்ட மன்றம், நீதித்துறை, திருடர்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இடைக்கால கிரிக்கெட் குழுவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை உத்தரவு தொடர்பில் இன்று(07.11.2023) நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை

பெட்ரோல் மற்றும் டீசல் தொடர்பில் வெளியான விசேட அறிக்கை

கிரிக்கெட் சபையில் ஊழல்

அது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நமது நாட்டில் கிரிக்கெட் விளையாட்டு அனைத்து அம்சங்களிலும் முன்னேற்றம் காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிரிக்கெட் விளையாட்டின் காரணமாக இலங்கை கிரிக்கெட் சபைக்குச் பெரும் செல்வம் சேர்ந்துள்ளது. எனவே, கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்தி செய்யப் பலர் ஒன்றிணைவது இதனை நிர்வகிப்பதற்கா அல்லது இதற்குக் கிடைக்கும் பணத்தை அபகரிப்பதற்காக என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டுடன் எவரும் சூழ்ச்சியாட இடமளிக்கவே முடியாது: சஜித் திட்டவட்டம் | No One Can Manipulate The Game Of Cricket Sajith

இலங்கை கிரிக்கெட் சபை மிகவும் ஊழல் நிறைந்ததாக மாறியுள்ளது என்பது தெளிவாகின்றது. இந்தத் திருட்டுக் குகையில் உள்ள திருடர்களை வெளியேற்றி, தெளிவான முறையில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிக்கும் திட்டத்திற்கு 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வந்து, கிரிக்கெட் விளையாட்டை அரசியல் அற்றதாக்கி நட்பு வட்டார சங்கங்களும் கேளிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

பிரபுக்கள் எனக் கூறிக்கொள்ளும் சிலர் கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்தைத் திருடுகின்றனர். நாம் ஒருபோதும் நீதிமன்றத்தை விமர்சிக்கவில்லை. எனினும், கிரிக்கெட் தொடர்பாக வழங்கப்பட்ட உத்தரவுகளில் கடுமையான சிக்கல்கள் உள்ளன.

220 இலட்சம் மக்களின் மனதில் குடிகொண்டுள்ள இந்த விளையாட்டுடன் நிறைவேற்று அதிகாரம், சட்ட மன்றம், நீதித்துறை, திருடர்கள் மற்றும் இலஞ்ச, ஊழல் மோசடிக்காரர்கள் சூழ்ச்சியாடுவதற்கு இடமளிக்க முடியாது. கிரிக்கெட்டைத் திருடர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால், அது வேறு உகந்த தீர்மானமாக இருக்க வேண்டும்.

காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து - செய்திகளின் தொகுப்பு

காதலிக்க மறுப்பு தெரிவித்ததனால் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து - செய்திகளின் தொகுப்பு

கிரிக்கெட் திருடர்கள்

இந்நாட்டில் கிரிக்கெட் சாம்பியனான திறமையான வீரர்கள் இருக்கின்றார்கள்.இவ்வாறானவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும். தற்போது விளையாட்டுத்துறை அமைச்சரால் எதுவும் செய்ய முடியாத நிலைக்கு ஜனாதிபதியும் அவரது அடியாட்களும் கிரிக்கெட்டில் தலையீடு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இவ்வாறான காரணங்களுக்காகவே நானும், எனது குழுவினரும் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்பவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்துக்குக் கிரிக்கெட் திருடர்களால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றதா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கிரிக்கெட் விளையாட்டுடன் எவரும் சூழ்ச்சியாட இடமளிக்கவே முடியாது: சஜித் திட்டவட்டம் | No One Can Manipulate The Game Of Cricket Sajith

விளையாட்டுத்துறை அமைச்சர் எடுக்கும் எந்தவொரு சரியான முடிவுக்கும் நாம் துணை நிற்போம். தொலைதூர கிராமங்களைச் சேர்ந்த பிள்ளைகள் கூட தேசிய அணிக்குள் நுழையும் வகையில் நிர்வாகம் மாற்றப்பட வேண்டும்.

அரசில் உள்ள ஏனையவர்களுக்கு முதுகெலும்பு இருந்தால் இதற்குத் துணை நிற்க வேண்டும். இது ஒரு பெறுமதியான வளம் என்பதால், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அல்லாமல் தேசிய நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் இவை மேற்கொள்ளப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கிரிக்கெட் துறை வீழ்ச்சி: முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திலகரட்ன தில்ஷான்

இலங்கையின் கிரிக்கெட் துறை வீழ்ச்சி: முன்னாள் வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள திலகரட்ன தில்ஷான்

கிரிக்கெட் நிர்வாக சபையில் மீண்டும் ஊழல்வாதிகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

கிரிக்கெட் நிர்வாக சபையில் மீண்டும் ஊழல்வாதிகள்: விளையாட்டுத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

[FF0XEGZ ]

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US