தேசிய சட்ட மாநாடு இன்று ஆரம்பம்
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்படும் தேசிய சட்ட மாநாடு ஆரம்பமாகவுள்ளது.
'நெருக்கடியின் ஊடாக வழிசெலுத்தல் - சட்டத்தின் பங்கு' என்ற தலைப்பில் கொழும்பில் இன்றய தினமும், (12.03.2023) நாளைய தினமும் (13.03.2023) இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டின் பிரதம அதிதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவும், கௌரவ அதிதியாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்கும் கலந்துகொள்ளவுள்ளனர்.
தேசிய சட்ட மாநாடு
தேசிய சட்ட மாநாடு பல அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டு இடம்பெறவுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன.
அவை ஒவ்வொன்றின் போதும் நெருக்கடியின் ஊடாக வழிநடத்துதல் மற்றும் சட்டத்தின் பங்கு என்பன குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.